திங்கள், செப்டம்பர் 12, 2011

செல்போன் பேசுவோர் கவனத்திற்கு !


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பலர் தங்களுடைய செல்போனை சார்ஜரில் இட்டிருக்கும் பொழுது போன் கால் வந்தால் சார்ஜரிலிந்து செல்போனை உருவாமல் அப்படியே எடுத்துப் பேசுவது இன்று அதிகமானோருக்கு பழக்கமாகி விட்டது.

இது பல நேரங்களில் சிறிய, சிறிய ஆபத்துகளையும், சில நேரங்களில் பேராபத்தையும் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது. 

செல்போன் வெளிவரத்தொடங்கிய ஆரம்ப காலத்தில் அது பணக்காரர்களுக்கு மட்டும் உபயோகமாக இருந்ததால் செல்போன் நிருவனங்கள் அதிகமான விலைக்கு தரமான செல்போன்களை தயாரித்து வழங்கியது.

இன்று ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் செல்போன்களை உபயோகிப்பதால் ஏராளமானப் போட்டி நிருவனங்கள் உருவாகி பணம் பண்ணும் நோக்கில் மலிவான விலையில் செல்போன்களை தயாரித்து உலகச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

அவ்வாறு மலிவு விலையில் தயாரிக்கப்படும் செல்போன்களின் உள்ளே தரம் தாழ்ந்த பேட்டரிகள் பொறுத்தப்படுகின்றன. அவ்வாறு பொருத்தப்படும் தரம் தாழ்ந்த பேட்டரிகள் அதிகத் திறன் கொண்ட மின்சாரத்தை தாங்கும் சக்தி  கொண்டவைகளாக இருப்பதில்லை.


அதனால் அதிவேகமாகப் பாய்ந்து வரும் மின்சாரத்தை வெளியில் கக்குகின்றன, அல்லது வெடித்து சிதறி விடுகின்றது.

சார்ஜரில் இருக்கும் செல்போன்கள் ஒலிக்கத் தொடங்கியதும் ஓடோடி வருபவர்கள் அவசரமாக கையில் எடுக்கும் போது, அல்லது காதில் வைத்து பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டரிக்கு வெளியில் கசியும் மின்சாரம் பாய்ந்து கை, அல்லது காதுடன் முகத்தைப் பதம் பார்த்து விடுகிறது. அது சிலருடைய உயிருக்கே உலை வைத்து விடுகிறது

சமீபத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்து புதுப்பேட்டை என்ற கிராமத்தில் சிட்காட் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சரித்யபோரா என்ற 21 வயது இளைஞர் 7-8-2010 அன்று சார்ஜரில் இருந்த தனது செல்போனில் ஒலிக்கும் அழைப்பைக் கேட்டு ஓடிவந்தவர் சார்ஜரிலிருந்து செல்போனை ரிமூவ் செய்யாமல் எடுத்துப் பேசிக்கொண்டிருக்கும் போது மின்சாரம் பாய்ந்து கை, முகம் கருகி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

செல்போனிலிருந்து சார்ஜரை உருவாமல் பேசுவது இன்று அதிகமான மக்களிடம் இருக்கும் அலச்சியப் போக்காகும் இதை தவிர்க்க வேண்டும்.

இதில் அதிகமான அலச்சியப் போக்கை கடைப் பிடிப்பது பெண்களாகும். சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அல்லது துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது செல்போன் மணியை கேட்டு வேகமாக ஓடிவந்து ஈரமான கையுடன் அப்படியே சார்ஜரிலிருந்து செல்போனை ரிமூவ் செய்யாமல் பேசுவதைப் பார்க்கின்றோம்.

இன்னும் சிலப் பெண்கள் தோள் புஜத்திற்கும், காதுக்கும் இடையில் போனை இடுக்கிக் கொண்டு சாய்ந்த வண்ணம் எரியும் நெருப்புடன் கூடிய அடுப்பருகே நின்று சாவகாசமாக பேசிக் கொண்டே சமையல் செய்கின்றனர்.


இதுப் பேராபத்தை விளைவிப்பதை அறிவதில்லை.

இனிவரும் காலங்களிலாவது செல்போன் சார்ஜரில் இருக்கும் போது போன் கால் வந்தால் செல்போனிலிருந்து சார்ஜரை ரிமூவ் செய்து விட்டுப் பேசலாம் மிஸ்டு கால் விழுந்து விடுமோ என்ற அச்சத்தாலும் அவசரப் பட வேண்டாம் உயிர் விலை மதிப்பற்றது,

செல்போன் இன்றியமையாதது என்பதால் சிறிது விலை அதிகமாக இருந்தாலும் தரமான கம்பெனிகளின் செல்போன்களை வாங்குவதற்கு முயற்சி செய்வோம்.  வரும் முன் காப்போம்.
உணர்வுக்கு எழுதிய கட்டுரை



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்